சென்னையில் சேறு மழையால் ஷாக்.. "கடவுள் புண்ணியத்துல தப்பிச்சோம்.. விபத்து தவிர்க்கப்பட்டது.. பகீர் தகவல்"

x

சென்னை கீழ்பாக்கத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பெய்த சேறு மழையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். பர்னபி சாலையில், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுரங்கத்திலிருந்து திடீரென பீய்ச்சியடித்த சேறு, அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மழையாக பொழிந்தது. இதில், 2 கார்கள் மற்றும், 2 இருசக்கர வாகனங்கள் சேறு மழையில் முழுமையாக நனைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுதாரித்ததால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் ஊழியர்கள் சேறால் நனைந்த வாகனங்களை தண்ணீர் ஊற்றி கழுவி கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்