பள்ளியில் ஆன்மிக பேச்சு சர்ச்சை.. - எதிர்பார்ப்பில் HM -கள் செய்யும் செயல்

x

சென்னையில் ஆன்மிக பேச்சு சர்ச்சையில் சிக்கிய இரண்டு தலைமை ஆசிரியர்களும் புதிய பள்ளிகளில் சேராமல் காலதாமதம் செய்து வருகின்றனர். ஆன்மிக பேச்சு சர்ச்சையானதை அடுத்து, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கும், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், இருவரும் புதிய பள்ளிகளில் பணியில் சேரவில்லை. இடமாற்ற உத்தரவு ரத்தாகலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இருவரும் காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்