"என்னை தான் நீ கல்யாணம் பண்ணனும்..!" பெண்ணை மிரட்டிய காதலன்..! காதலி எடுத்த தீடீர் முடிவு..

x

திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் பிரச்சினையில் ஈடுபட மாட்டோம் என எழுதிக்கொடுத்துவிட்டு பிரிந்துள்ளனர். எனினும், ஹரிபிரசாத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16ம் தேதி வேலை முடித்து சென்ற போது ஆடையை பிடித்து அத்துமீறியதாகவும், தான் வேறு யாரையாவது திருமணம் செய்தால், இருவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வேன் என ஹரிபிரசாத் மிரட்டியதாக அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், ஹரிபிரசாத்தை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்