ஏர்போர்ட்டை அதிர வைத்த பெண்.. "அனுப்பியது யார்?" - பரபரத்த அதிகாரிகள்

x

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல தயாரான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 32 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த சூட்கேசில் கட்டு கட்டாக 20 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 20 லட்சம் பணத்தை சிங்கப்பூர் கொண்டு சென்று கொடுத்துவிட்டால் ரூபாய் 10 ஆயிரம் தருவதாக ஒருவர் கூறியதால் கொண்டு செல்வதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், 20 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பிய நபர் குறித்து அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்