சென்னையில் போதையில் பெண் காவலரை வீடியோ எடுத்த இளைஞர்

x

சென்னை, கோயம்பேடில் போக்குவரத்து பெண் காவலருக்கு கஞ்சா போதையில் கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். நோ என்ட்ரியில் பைக்கில் வந்த இளைஞர்களை, பெண் காவலர் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இருவரும் காவலரை மிரட்டியதோடு அவரை செல்போனிலும் வீடியோ எடுத்தும் அத்துமீறி இருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜாட்வின் மற்றும் ரெட்டில்ஸ் வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்