சென்னையில் கடத்தப்பட்ட இளைஞர் ஒரு குருவியா? - பரபரப்பு ட்விஸ்ட்

x

கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்தி சென்று தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் கடத்திய கும்பல் அவரை தாக்கியுள்ளனர். அதிலிருந்து தப்பித்த இம்ரான்கான் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சையத் அபுதாகீர் உட்பட மூன்று பேரைக் கைது செய்து உள்ளனர். விசாரணையில் இம்ரான்கான் வெளிநாட்டில் இருந்து பொருட்களை எடுத்து வரும் குருவியாகச் செயல்பட்டு வந்து இருக்கிறார். இதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக சையத் அபுதாகீர், இம்ரான்கானைக் கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்