"சென்னையை அலறவிட்ட கொள்ளையர்கள்"ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீசார்..! பரபரப்பு ச்சேசிங்

x

சென்னை, ஆவடி அருகே... நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை போலீசார் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஆவடி அடுத்துள்ள முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வடமாநில கொள்ளையர்களின் இந்த கைவரிசை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த இருவரை ஏற்கனவே கைது செய்து 40 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில், அசோக், சுபாஷ் என ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை கைது செய்திருக்கும் போலீசார், அவர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்