சென்னையில் நள்ளிரவில் நடந்த நடக்க கூடாத செயல்... காதை கிழித்த சத்தம்.. 2 பேரை காவு வாங்கிய அதிர்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அருமந்தை பகுதியில் நேற்று அதிகாலை முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மணி, ஷாம்சுந்தர் ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தியதில், ஆட்டோ ரேஸ் நடந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஆட்டோக்கள் சீறி பாயும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்