சென்னையில் கொளுந்து விட்டு எரிந்த கார்.. ஸ்தம்பித்து போன கிண்டி | Chennai | Guindy | Car Fire

x

கிண்டி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர்பொன் இருளப்பன்(41). இவர் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பெருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் கிண்டியில் உபகரணங்களை வாங்கி கொண்டு கூடுவாஞ்சேரிக்கு காரில் சென்றார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்த போது காரில் இருந்து புகை வருவதை கண்டதும் காரை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து வாகனங்களை நிறுத்தி தியனைப்பு துறைக்கு தகவல் தந்தனர். கிண்டி தீயனைப்பு துறை வீரர்கள் வந்து அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிச்சல் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்