சென்னை இளைஞர் துபாயில் விபரீதம்.. - சாகும் முன் கடைசியாக பேசிய அதிர்ச்சி வீடியோ..

x

2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொடுத்து ஏமாந்ததால், சென்னையைச் சேர்ந்த இளைஞர் துபாயில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், துபாயில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மூவருக்கு விற்பனை ரீதியாக கொடுத்ததாகவும், மூவரும் பொருளுக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிருந்த தமீம் அன்சாரி தனது உறவினர்களுக்கு வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்