வாங்க டீ குடிங்க... கூப்பிட்டவர் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த கணவன் - மனைவி - சென்னையில் பயங்கரம்

x
  • சென்னை சிந்தாரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்தவர் ராகுல். கூலி வேலை செய்து வரும் இவருக்கும், அவரது உறவினர்களான பிரபு- காயத்ரி தம்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் ராகுல் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு- காயத்ரி தம்பதியை அவர் டீ குடிக்க அழைத்துள்ளார். உடனே பிரபு, ஒசி டீ குடிக்க கூப்பிடுகிறாயா? என கோபத்துடன் கேட்ட அவர், நான் என்ன பிச்சைக்காரனா? என கேட்டு ராகுலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஏற்கனவே நான் கஞ்சா விற்பதை நீதான் போலீஸில் தெரிவித்தாயா என கூறி இருவரும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் கீழே கடந்த பீர் பாட்டிலை எடுத்த அவர்கள் ராகுலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த காயங்களுடன் நிலைகுலைந்து கீழே விழுந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்தாரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பிரபு- காயத்ரி தம்பதியை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்