குற்றவியல் வழக்குகளை விசாரிக்க புதிய கட்டடம் - அடிக்கல் நாட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி

x

சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் அடங்கிய ஐந்து மாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழங்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்