ரூ.2.5 லட்சம் அபராதம்... சென்னை வாசிகளே உஷாரா இருங்க

x

சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு இரண்டரை லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகா ரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்