12 கிமீ வேகத்தில் நகரும் சுழற்சி.. நாளை எப்போது கரையை கடக்கும்? - சென்னையை உரசி செல்லலாம்

x

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை காலை கரையைக் கடக்கக்கூடும்...தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது... இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரா நெல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது... தொடர்ந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் புதுச்சேரிக்கும் நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்