`ஜூன் 4'... காவல் ஆணையர் முக்கிய ஆலோசனை... | Chennai

x

சென்னையில் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, பாதுகாப்பு பணிகள் தொடர்பாக பெருநகர காவல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. வடசென்னை தொகுதி வாக்குகள், ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளது. இங்கு, வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள பகுதிகளில் நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்