ஓவர் ஸ்பீடில் வந்து பைக்குகளை அடித்து தூக்கிய கார்.. - தட்டி கேட்டவர்களை மிரட்டிய குடும்பம்..

x

ஓவர் ஸ்பீடில் வந்து பைக்குகளை அடித்து தூக்கிய கார்.. - தட்டி கேட்டவர்களை மிரட்டிய குடும்பம்.. சென்னையில் அதிர்ச்சி


சென்னையில் அதி வேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நேற்று நள்ளிரவு ஜெமினியிலிருந்து அண்ணா சாலையை நோக்கி, கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு சக்கர வாகனத்தின் உரிமையாளர்கள், கார் ஓட்டி வந்த குடும்பத்தினரிடம் இதுபற்றி கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பி விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான சொகுசு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்