சென்னை GST சாலையில் பயங்கரம் -5 வாகனங்கள் மோதி கோர விபத்து-உதவி செய்தவர்களுக்கும் நேர்ந்த கதி

x

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர்.

ஆந்திராவில் இருந்து 5 பேருடன் சென்ற சொகுசு கார் ஒன்று, திருச்சி நொக்கி சென்று கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் இருவர் காயமடைந்தனர். இந்நிலையில், அதே திசையில் வந்தவர்கள் தங்களது தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முற்பட்டனர். அப்போது திருநின்றவூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற மினி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி கவிழ்ந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்