கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட நடத்துநர் உடல் - கதறி அழுத மனைவி, மகள்கள்

x

சென்னையில் பணியில் இருக்கும் போது பயணியுடன் ஏற்பட்ட தகராறில், அரசு மாநகர பேருந்து நடத்துனர் ஜெகன் குமார், அடித்து கீழே தள்ளி கொல்லப்பட்டார். இதையடுத்து ஜெகன் குமாரின் உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம் கீழ் குளம் அடுத்த பரவை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, கிறிஸ்தவ முறைப்படி குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

49 வயதான ஜெகன் குமாருக்கு,சோனா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.ஜெகன்குமாருக்கு, தமிழ்நாடு அரசு நிவாரணத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவரது மனைக்கு தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்