சென்னையில் கெட்டுப்போன பிரியாணி..வழக்கறிஞர்களை தாக்கிய கடைக்காரர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னையில் கெட்டுப்போன பிரியாணி..வழக்கறிஞர்களை தாக்கிய கடைக்காரர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

சென்னை புளியந்தோப்பில், உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதால் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புளியந்தோப்பு அம்பேத்கர் காலணியில் உள்ள பிரியாணி கடையில், வழக்கறிஞர்கள் இருவர் பிரியாணி சாப்பிடச் சென்ற நிலையில், அங்கு கெட்டுப் போன பிரியாணி பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கடைக்காரர்களிடம் முறையிட்டதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிரியாணி சாப்பிட வந்த வழக்கறிஞர்களை கடைக்காரர்கள் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. புகாரின் அடிப்படையில், இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஐவரை போலீசார் தேடி வரும் நிலையில், சம்பவத்தன்று பிரியாணி கடைக்காரர்களுடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்