சென்னையில் ஆத்திரத்தில் மர்ம நபர் செய்த செயல்

x

சென்னையில், தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலணியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்மில், பணம் எடுப்பதற்காக ஒருவர் காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் பணம் வராததால், ஆத்திரமடைந்த அந்த நபர், ஏ.டி.எம் எந்திரத்தை சேதப்படுத்தினார். மேலும் சிசிடிவி கேமராவையும் பிடுங்கி எறிந்துவிட்டு சென்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்