கண்டெய்னர் லாரி மீது மோதிய அரசு பேருந்து - உள்ளே இருந்த 15 பயணிகள் நிலை?

x

சென்னையில் இருந்து திருப்பதி சென்ற தமிழக அரசுப்பேருந்து சாலை விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. ரேணிகுண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென நிறுத்தியதால் தமிழக பேருந்து பின்னால் மோதியது... இதில் பேருந்து முன் பகுதி நொறுங்கிய நிலையில் சிறு காயங்களுடன் ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதில் பயணித்த 15 பயணிகளும் நல்வாய்ப்பாக சிறுகாயம் கூட இன்றி உயிர் பிழைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்