பிரபல நடிகையின் முன்னாள் பணியாளர் புகார்.. "எனக்கு தொடர்பில்லை"

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நடிகை ஒருவரின் வீட்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடுபோனதாகவும், வீட்டில் பணிபுரியும் பணியாளர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பணியாளர் சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட சுபாஷ், தான் தங்கியிருந்த அறையில் வைத்து தன்னை 7 பேருடன் சேர்ந்து நடிகை தாக்கியதாக போலீசில் புகாரளித்தார். தொடர்ந்து, புகாரில் நடவடிக்கை இல்லையென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தவறான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இதுவரை எவ்வித நடவடிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ், புகார் அளித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்