1 வருடத்திற்கு முன் செய்த சம்பவம் - தலைகீழாய் மாறிய வாழ்க்கை

x

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது மது அருந்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜைக் கடந்த ஆண்டு கைது செய்தனர்.அப்போது நாகராஜ் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசும் வீடியோ வைராலாக பரவியது. தொடர்ந்து விசாரணையின் போது நாகராஜின் கால் உடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட ஒன்றை வருடத்திற்குப் பின்னர் குணமடைந்த நாகராஜ் தற்போது வேலைக்குச் சென்று வந்த இருக்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர் குறித்து வீணான வதந்திகளைப் பரப்பியுள்ளனர். இதனால் நாகராஜின் மாற்றுத்திறனாளி மனைவி உமா அவரை விட்டுப் பிரிந்து சென்று இருக்கிறார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை மிரட்டி வருவதால் எந்த வேலைக்கும் செல்லமுடியாத படி வீட்டில் முடங்கி இருப்பதாக நாகராஜ் தெரிவித்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்