கலெக்டர் திடீர் இன்ஸ்பெக்சன்.. கலகலத்து போன அரசு ஹாஸ்பிடல்

x

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் புதிதாக குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி பெட்டி வைக்கவும் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் , அறுவை சிகிச்சை அரங்கம், வார்டுகள் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்