வாரத்தின் முதல் நாளே ரயிலால் மக்கள் அவதி | chengalpattu | electrictrains

x

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் - சிங்கபெருமாள் கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு சரி செய்த பிறகு ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வாரத்தில் முதல்நாளான இன்று சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உருவானது.


Next Story

மேலும் செய்திகள்