விரட்டி விரட்டி கடித்த மிருகங்கள்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு அருகே வெறிநாய்கள் விரட்டி கடித்ததில், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் காயமடைந்தனர். அங்குள்ள வளர்குன்றம் கிராமத்தில் சுற்றித் திரிந்த 2 தெருநாய்கள், தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற ஜெயக்கொடி என்ற மூதாட்டியை கடித்துள்ளது. பின்னர், தெருவில் நடந்து சென்ற சிறுவன், 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை நாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதனையடுத்து, காயமடைந்தவர்கள், சிறுங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், அங்கு போதிய மருந்துகள் இல்லாததால், சிகிச்சை அளிக்க தாமதமானதாக கூறப்படுகிறது. இதனிடையே, நாய் கடிபட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்