தூங்கிய மகனை கோடாரியால் சரமாரி வெட்டி கொன்ற தந்தை.. - சென்னையில் அதிர்ச்சி..

x

மதுராந்தகத்தில் குடிபோதையில் பெற்ற மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த கோபால் என்பவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மதுபோதையில் இருந்த கோபால் இரவு முழுவதும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனான பார்த்திபனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆத்திரம் தனியாத கோபால் அதிகாலையில் பார்த்திபன் தூங்கிக்கொண்டு இருந்தபோது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் படுகாயம் அடந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்