சென்னையில் மத்திய குழு ஆய்வு - ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்

x

தென் சென்னை பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்தனர். மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி தலைமையிலான குழுவினர், வேளச்சேரி கல்கி நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தையூர், கண்டிகை, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சேதங்களை நேரில் ஆய்வு செய்தனர். புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாதிப்பு விவரங்களை பார்வையிட்ட அவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தனர்


Next Story

மேலும் செய்திகள்