``போலீஸ பாத்தாலே அடிப்பேன்''... ஏட்டையா மீது சரமாரி தாக்குதல்... சிக்கிய வடமாநில நபர்-பகீர் காட்சி

x

ஆந்திர மாநிலம் திருப்பதியில், தலைமைக்காவலரை, ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி சாதுபேட்டை பகுதியில் தலைமைக் காவலராக பணியாற்றும் தாசு என்பவர் கடைக்குச் சென்றபோது, அங்கு கட்டையுடன் காத்திருந்த ஒருவர் கடுமையாக தாக்கினார். இதனால் தாசு, அங்கேயே மயக்கமடைந்து சரிந்து விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய நபர் மேற்குவங்கத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போலீஸ் சீருடையில் உள்ளவர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்