``சிலை கடத்தல் கும்பலிடம் பணத்தை வாங்கி..'' கிளம்பிய சர்ச்சை - பொன் மாணிக்கவேல் ஆவேசம்

x

தனியார் யூடியூப் சேனலில், நடிகைகள் குறித்து டாக்டர் காந்தராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ஆதாரமின்றி நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசி அவதூறு பரப்பி இருக்கும் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகாரளித்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கவும் வலியுறுத்திய நிலையில், டாக்டர் காந்தாராஜ் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த ஊடகவியலாளர் மீதும் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், புகார் குறித்தான விசாரணைக்கு ஆஜராகுமாறு டாக்டர் காந்தராஜூக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்