"வந்தா கொன்றுவீங்களா.." சொந்த வீட்டில் வசிக்க விடாத சாதி சிக்கல்.. திருப்பூர் அருகே பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சொந்த வீட்டில் குடியிருக்க எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சிறுவத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், காங்கேயம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் சொந்தமாக வீடு வாங்கி தனது குடும்பத்தினருடன் தங்கி வருகிறார். ஆனால், அந்த பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரும், பெண் கவுன்சிலரின் கணவர் சிவகுமாரும், ஸ்ரீதர் குடும்பத்தினர் அங்கு வசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீதர் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்