நடுங்கவைத்த பார்க்கிங்.. அலேக்காக தூக்கி ரோட்டில் வீசிய ரவுடிகள்.. கதறும் ஓனர் | Car Parking Issues

x

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கார் பார்க்கிங் தகராறு, பொய்யான புகார் தன் மீது கொடுக்க திட்டமிட்டிருப்பதாக எழில்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த எழில் குமார் சாலிகிராமம் எம்.ஜி.ஆர் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த வீட்டில் கார் பார்க்கிங் செய்வதில் கீழ்தளத்தில் உள்ள அருண் என்பவருக்கும், எழில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அருண் அவரது அடியாட்களுடன் இணைந்து எழில்குமாரின் காரை குண்டுக்கட்டாக தூக்கி வீசினார்.

சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் எழில் குமார் விருகம்பாக்கம் மற்றும் கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் அருண் மீது விருகம்பாக்கம் போலீசார் ஒரு சொத்தை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் எழில் குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்