காருக்குள் அமர்ந்த நிலையில் ஒரு குடும்பமே அழிந்த பெருஞ்சோகம்.. சம்பவத்தை கேட்டாலே நெஞ்சு பதறுகிறது

x

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்த்துவிட்டு, 5 பேர் காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார், பி.முட்லூர் அடுத்த ஆணையம்குப்பம் அருகே சென்றபோது,

சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி, மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில், 3 வயது ஆண் குழந்தை உள்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீசார், 5 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பதை அறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிசென்ற லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த யாசர் ஹராபத், மயிலாடுதுறை மாவட்டம், நக்கம்பாடியை சேர்ந்த முகமது அன்வர் மற்றும் ஹாஜிதா பேகம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த சராபாத் நிஷா மற்றும் அப்னான் என்ற 3 வயது ஆண் குழந்தை என அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்