சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்... பல்லாவரம் GST சாலையில் பரபரப்பு
சென்னை பல்லாவரத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்திலிருந்து பல்லாவரத்தை நோக்கி 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். பான்ஸ் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் செல்லும் போது காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும், காரை நிறுத்திவிட்டு அனைவரும் வெளியேறினர். தீ மளமளவென பரவி கார் முழுவுதும் பற்றி எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
Next Story