கால் டாக்ஸி புக் செய்து ரவுடி, மனைவி செய்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி

x

கால் டாக்ஸி புக் செய்து ரவுடி, மனைவி செய்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி

கால் டாக்ஸி ஒட்டுநரை தாக்கி பணபறறித்த விவகாரத்தில் பிரபல ரவுடி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சென்னையில் கால் டாக்ஸி ஒட்டுநராக

வேலை பார்த்து வருகிறார். மணலியில் இருந்து ரெட்ஹில்ஸ் செல்ல வேண்டும் என கூறி வினோத்குமாரை சிலர் புக் செய்து இருக்கின்றனர். சிறிது நேரத்தில் காரில் ஏறியவர்கள்

வினோத்குமாரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வியாசர்பாடியை சேர்ந்த ராஜி என்பவரையும் அவரது மனைவி பிரவீனா ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் ராஜி மீது சுமார் 18 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடதக்கது. மேலும் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்