மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் திடீர் குற்றாலம்.. குளித்து கும்மாளமிட்ட காட்சி

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ள பகுதியில் பெய்த கனமழையால், பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் இருந்து அருவிபோல் மழை நீர் கொட்டியது. அந்த நீரில், அருவியில் குளிப்பதுபோல் ஒருவர் குதூகலமாக குளித்து மகிழ்ந்தார். யாரை பற்றியும் கவலைப்படாமல் அவர் குளித்த‌து பயணிகளை சிரிக்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்