உயிர் பயத்தை கண்முன் காட்டிய சம்பவம்.. அரசு ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கும்பல்..

x

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் வழி விடாதது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமாந்துறை சுங்கசாவடி அருகே ஒரு அரசு பேருந்துக்கு முந்தி செல்ல வழி விடாததாலும் உரசுவது போல் சென்றதாலும் மற்றொரு அரசுபேருந்து ஓட்டுனர் மற்றும் அதில் வந்த பயணிகள் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஓட்டுநர் பரந்தாமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பஸ் டிப்போவில் கூறியதற்கு புகார் ஏதும் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தாக்குதல் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்