கையோடு வந்த கியர் ராடு.. சென்னையை பரபரப்பாக்கிய பஸ்... திணறிய எழும்பூர்...

x

சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்று பிரதான சாலையில் பழுதாகி நின்றது. கே.கே.நகரில் இருந்து பாரிமுனை சென்ற மாநகரப் பேருந்து திடீரென வழியில் பழுதானது. இதையடுத்து, பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். எழும்பூர் வழியாக சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆறு பாலத்தை கடக்க முடியாமல் நடு வழியிலேயே பேருந்து நின்றதால் எழும்பூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்த கியர் தனியாக கிடந்த நிலையில், மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு பேருந்து எடுத்து செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்