3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி... வெளியான பகீர் சிசிடிவி காட்சி

x

சேலத்தில் கட்டிடத் தொழிலாளி, 3வது மாடியில் இருந்து தவறி விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சேலம் நான்குரோடு, நாராயணசாமிபுரம் பகுதியில் அம்மாசி என்பவர் கட்டிடப் பணியில் ஈடுபட்டார். 3வது மாடியில் கட்டிட பழுதுகளை சரிபார்த்தபோது, அம்மாசி தவறி விழுந்தார். காலில் பலத்த காயத்துடன் மயக்க நிலைக்கு சென்ற அம்மாசியை பொதுமக்கள் மீட்டனர். கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்