இந்த தொழிலில் முதலீடு செய்தால் சலுகையுடன் நிதியுதவி.. பட்ஜெட்டில் அரசு அசத்தல் அறிவிப்பு

x

மத்திய பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு மொத்தமாக 2 ஆயிரத்து 616 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்திற்கு 2 ஆயிரத்து 352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், இறால் மீன் பண்ணைகள் அமைக்க முன்வரும் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சலுகையுடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இறால் பண்ணை இடுபொருட்கள், மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதுடன், குஞ்சு வளர்ப்புக்கான பொடி மீதான வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்