"பேரதிர்ச்சி" - விசயம் தெரிந்ததும் வெடித்த அண்ணாமலை

x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தனக்கு பேரதிர்ச்சி தருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்காகவும் தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வன்முறை வழக்கமாகிவிட்டதாக, ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்