ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தேதி குறித்த தம்பி - புன்னை பாலா சொன்ன வாக்குமூலம்

x

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல், கடந்த ஒருவார காலமாக நோட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி, தான் கட்டி வந்த வீட்டின் அருகே வருவதையும், குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதையும் நோட்டமிட்டு, ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலாவுக்கு திருமலை தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், உணவு டெலிவரி செய்வதுபோல நடித்து, முதல் வெட்டாக ஆற்காடு சுரேஷின் மைத்துனர் அருள் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்