விநாயகரோடு கடலில் கவிழ்ந்த படகு.. 20 பேருக்கு நேர்ந்த சோதனை

x

விநாயகர் சிலை கரைக்கப்பட்ட போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்காக மும்பை அந்தேரியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வெர்சோவா கடற்கரையில் கரைப்பதற்காக பக்தர்கள் படகில் எடுத்துச் சென்றனர். அப்போது படகில் அளவுக்கதிகமாக நபர்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.

தொடர்ந்து படகில் இருந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடலில் குதித்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று கடலில் விழுந்தவர்களை காப்பாற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் பாரத்தால்... கரைக்கும் முன்னரே விநாயகர் சிலை தாமாக கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்