சென்னை பெசன்ட் நகர் பீச்சில் படுகொலை.. திடுக்கிடும் பின்னணி

x

சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நண்பரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 7-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமன் என்பவர், தனது நண்பர்களால் எலியட்ஸ் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டார். நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன்படி, அப்பு என்கிற தளபதி, சரத் என்கிற சண்முகம், ஆமோஸ், சரண்ராஜ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்