'எடுத்தேன் பாரு ஓட்டம்..' கம்பிக்குள் சிக்கிய கரடியை காப்பாற்றியதும் கொடுத்த ரியாக் ஷன்...

x

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், ஒரு வயது கரடி குட்டி தண்ணீர் செல்லும் குழாயின் கம்பியில் சிக்கிக் கொண்டது. அங்கிருந்த தாய் கரடி, குட்டி கரடியை காப்பாற்ற போராடிய நிலையில், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறை குழுவினர் கம்பியில் சிக்கியிருந்த கரடி குட்டியை மீட்டனர். பின்னர் தாயையும், குட்டி கரடியையும் அடர் வனப்பகுதியில் விரட்டியடித்தனர்


Next Story

மேலும் செய்திகள்