வாக்கு கொடுத்த மம்தா.. உச்சகட்ட டென்ஷனாகி பாய்ந்த வங்கதேச அரசு

x

வாக்கு கொடுத்த மம்தா.. உச்சகட்ட டென்ஷனாகி பாய்ந்த வங்கதேச அரசு

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றி சிரமப்படும் மக்களுக்கு அடைக்கலம் தருவோம் என் அண்மையில் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேச அரசு, தங்களது நாட்டின் உள்விவகாரம் குறித்து தவறான கருத்துக்களை கூறியுள்ளதாக சாடியுள்ளது. நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வரும் போது, மாணவர்களின் மரணம் பற்றிய கருத்துக்கள், மக்களை தவறாக வழிநடத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மக்களுக்கு அடைக்கலம் தருவதாக மம்தா கூறியிருப்பது தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் நிலைமையை தவறாக பயன்படுத்திக்கொள்ள உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்