8,000 அழுகிய முட்டைகள்... கேக், பிரட், பன்- பிரபல பேக்கரிகளின் கேப்மாரி தனம்- குமட்ட வைத்த சம்பவம்

x

திருச்சியில், பேக்கரிகளில் இருந்து 8 ஆயிரம் முட்டைகள் மற்றும் 215 கிலோ கேக் மற்றும் பிரெட் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

நாவூற வைக்கும் கேக்குகளை....ஆசை ஆசையாக வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கும், அதனை பிரியத்துடன் வாங்கி கொடுக்கும் பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாநகரில் அரங்கேறிய சம்பவம்....

ஆம்...பல ட்ரேக்களில் அடுக்கப்பட்டிருந்த முட்டைகளை கொத்து கொத்தாக பினாயில் ஊற்றி அழித்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி காட்ட...அதன் பின்னணியோ பீதியை கிளப்புகிறது...

திருச்சி மாநகரில் உள்ள சில பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக் மற்றும் பிரட்டுகள் அழுகிய முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும், இந்த அழுகிய முட்டைகளை நாமக்கல்லில் இருந்து குறைந்த விலைக்கு மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரிகள் லாபம் பார்த்து வருவதாகவும் நீண்ட நாட்களாக குற்றஞ்சாட்டியுள்ளனர் அப்பகுதி வாசிகள்..


Next Story

மேலும் செய்திகள்