பாதாம் பால், சமோசா... ஒற்றை வீடியோவால் வெளிவந்த பிரபல உணவகத்தின் அதிர்ச்சி காட்சி

x

பிரபல உணவகத்தில் 4 வயது குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட பாதாம் பால் தரமற்ற நிலையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... திருப்பத்தூர் நியூடவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ் நாட்றம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சமோசா தரமற்ற நிலையில் இருந்ததாகவும், மேலும் அவரது 4 வயது குழந்தை குடித்த பாதாம் பால் கெட்டுப்போன நிலையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உணவக உரிமையாளரிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் அளிக்காமல் அநாகரிகமாக பேசியதாகத் தெரிகிறது... இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்