சொந்த ஊருக்கு ஆசையாக கிளம்பிய மக்கள்.. சென்னையை தாண்டுவதற்குள் செக் வைத்த அதிகாரி

x

தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிகம் கட்டணம் வசூலிக்கப்பவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள், உத்தண்டி சுங்கச்சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கேட்டறிந்தனர். அப்போது விதிமுறையை மீறி சென்ற ஆம்னி பேருந்துகளுக்கும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்