சென்னை பீச்-ல் கரை ஒதுங்கிய கொடூர ப்ளூ டிராகன் - அழகில் புதைந்திருக்கும் விஷம்

x

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விஷத்தன்மை வாய்ந்த ப்ளூ டிராகன் மீன்கள் கரை ஒதுங்குவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பொதுவாக ஆழ்கடலில் வசிக்கும் தன்மை கொண்ட ப்ளூ டிராகன் மீன்கள், விஷக் கொடுக்குகளைக் கொண்டுள்ளன. இந்த வகை மீன்கள் கொட்டினால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும். தற்போது பெசன்ட் நகர் கடற்கரையில் ப்ளு டிரகான் மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்கி வருகின்றன. பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த வகை மீன்களில் விஷத் தன்மை இருப்பதால், கடற்கரைக்கு செல்வோர் இவற்றைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இந்த வகை மீன்கள் புயல் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்